பயங்கரவாத குற்றச்சாட்டில் 15 உக்ரைன் வீரர்களுக்கு சிறைத்தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்

தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 15 உக்ரேனிய வீரர்களை பயங்கரவாதக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
ரோஸ்டோவ்-ஆன்-டானில் (Rostov-on-Don) உள்ள இராணுவ நீதிமன்றம், ரஷ்யா பயங்கரவாதக் குழுவாகப் பெயரிட்ட ஐடர் (Idar) படைப்பிரிவை சேர்ந்த 15 பேருக்கு 15 முதல் 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மார்ச் மாதத்திற்குப் பிறகு, உக்ரேனிய போர்க் கைதிகள் மீதான இரண்டாவது விசாரணை இதுவாகும்.
இதற்கு முன்னதாக, உயர்மட்ட அசோவ் (Azov) படைப்பிரிவின் 23 உறுப்பினர்கள் இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில், உக்ரைனின் மனித உரிமைகள் தூதர் டிமிட்ரோ லுபினெட்ஸ் (Dmytro Lubinets), விசாரணையை “வெட்கக்கேடானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)