இலங்கை செய்தி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – நாமல் வெளியிட்ட அறிவிப்பு

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் வேட்பாளரின் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது 4 அல்லது 6 வாரங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கு பலமாக இருப்பதாக அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன் என பல்வேறு தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டிய தேவை தமது கட்சிக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கு இணங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரவிருக்கும் எந்த தேர்தலையும் சந்திக்க தானும் தனது கட்சியும் தயாராக உள்ளோம் என்றார்.

அமைப்பின் செயற்பாடுகள் தரை மட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!