ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!

தென்னாப்பிரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் நேற்று (03.04) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் பதவி துறந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் வழக்கறிஞர்கள் சபாநாயகர் நோசிவிவே மபிசா-நகாகுலா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த உள்ளதாகக் கூறினர்.

அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தக்காரரிடமிருந்து சுமார் $135 000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து மபிசா-நகாகுலா தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்ததாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

“எங்கள் நாட்டின் சட்ட அமலாக்க முகவர்களால் எனக்கு எதிராக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விசாரணையை சமாளிக்க எனது நேரத்தையும் கவனத்தையும் அர்ப்பணிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு