உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவின் போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இந்தியா முழுவதும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சிலைகளை கரைப்பதற்காக சிறுவர்கள் சென்ற வாகனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகனத்தில் பயணித்த 9 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து கடுமையாக காயமடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் லோதன் முதன்மை சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களுடைய தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு மருத்துவ கல்லூரிக்கு அனைவரையும் கொண்டு செல்ல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
(Visited 5 times, 1 visits today)





