இலங்கை

மியன்மார் சைபர் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் சைபர் கிரைம் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

மீட்கப்பட்ட 06 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு அருகிலுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதியில் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த குழுவிடம் சிக்கிக்கொண்ட இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தப் பகுதியில் குறைந்தது 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியே அவர்கள், சுற்றுலா விசாவில் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்