கர்நாடகாவில் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்
கர்நாடகாவின் பெரியபட்ணாவில்(Periyapatna) உள்ள பெட்டடபுராவில்(Pettahpura) ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய அரபியா பானு(Arabiya Bhanu), தனது ஒன்றரை வயது மகள் மற்றும் பத்து நாள் பெண் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், அவரது கணவர் பெங்களூருவில்(Bengaluru) உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை செய்கிறார் என்றும், அவர் பெட்டடபுராவில் உள்ள தனது வீட்டில் குழந்தைகளுடன் தங்கியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறால் அவர் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





