உலகம் செய்தி

வடகிழக்கு பிரேசிலில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் வடகிழக்கில் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

30 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து பெர்னாம்புகோ (Pernambuco) மாநிலத்தில் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பதினொரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பெடரல் நெடுஞ்சாலை காவல்துறை (Federal Highway Police) தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!