ஆசியா செய்தி

துருக்கியில் நிலநடுக்கத்தின் அழிவுகளுக்கு மத்தியிலும் தேர்தலை நடத்த திட்டம்

துருக்கி பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்ட தினத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்புகளை துருக்கிய ஜனாதிபதி ரிஷப் தையிப் எர்டோகன் வெளியிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில், நிலநடுக்கத்தின் பின் விளைவுகளை அரசாங்கம் கையாள்வதை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தங்கள் பதிலை மே 14 அன்று வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.

துருக்கிய நிலநடுக்கத்தில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 இல்சத்து 4 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பல மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அதேநேரம் நிலநடுக்கத்தில் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!