உலகம் செய்தி

தைவானுக்கு 11 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!

தைவானுக்கு சுமார் $11 பில்லியன் (£8.2 பில்லியன்) மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தொகுப்பில் மேம்பட்ட ரொக்கெட் ஏவுகணைகள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகள் அடங்கும்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அதேநேரம் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியமைத்ததில் இருந்து இரண்டாவது முறையாக தைவானுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் உதவிக்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று நன்றி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் எனத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த அறிவிப்பு குறித்து சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!