பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் – 14 பேர் பலி!
அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமையன்று பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 14 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு கப்பல்களை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே உயிர் பிழைத்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயணித்ததாக கூறப்படும் நான்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு கப்பல்களும் அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதைகளில் பயணித்தாகவும், இதனைத் தொடர்ந்தே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 5 visits today)





