மத்தியப் பிரதேசத்தில் துர்கா சிலைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஏரியில் விழுந்து விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் மரணம்
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் விஜயதசமி அன்று துர்கா தேவியின் சிலைகளை கரைப்பதற்காக பக்தர்கள் சென்ற டிராக்டர் ஏரியில் விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அந்த டிராக்டரில் கிட்டத்தட்ட 30 பக்தர்கள் இருந்ததாக மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பந்தனா பகுதியில் பல்வேறு கிராமங்களிலிருந்து துர்கா தேவியின் சிலைகளை கரைப்பதற்காக ஏற்றிச் சென்ற டிராக்டரில் பக்தர்கள் சவாரி செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி அனுராக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்து, சமூக ஊடக தளமான Xல், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்கும் என்று அறிவித்துள்ளார்.





