இலங்கை

இந்த வருடத்தில் தொழில் தேடி வேறு நாடுகளுக்கு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் மொத்தம் 212,302 இலங்கைத் தொழிலாளர்கள்  வேலைதேடி பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக காணப்படுகிறது. குவைத் இலங்கைத் தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்களை உள்வாங்கிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (41,180) மற்றும் கத்தார் (30,263) ஆகிய நாடுகளுக்கு தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதையும் SLBFE அவதானித்துள்ளது, 8,015 பேர் ஜப்பானுக்கும் 4,324 பேர் தென் கொரியாவுக்கும் வேலை வாய்ப்புகளுக்காகச் செல்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்