இலங்கை

நெருக்கடிக்குப் பின் மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் – IMF வெளியிட்ட தகவல்

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நெருக்கடிக்குப் பின்னராக வலுவான மீட்சியையும் மேம்பட்ட நிதி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் ஐந்தாவது மதிப்பாய்வை, சர்வதேச நாணய நிதியக் குழு தற்போது நடத்தி வருகிறது.

முன்னதாக, 2025 ஜூலை முதலாம் திகதியன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, தமது நான்காவது மதிப்பாய்வை முடித்தது. இந்த நிலையில், இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கிடைத்தன.

இதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், நிதி உதவியாக 1.74 பில்லியன் டொலரை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியக்கணிப்பின்படி, இலங்கைக்கான பொருளாதாரம் நம்பிக்கைக்குரியதாக மாற்றமடைந்துள்ளது.

பணவீக்கமும் தணிந்துள்ளது, அத்துடன் அரச வருமானமும் கணிசமாக மேம்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது என்றாலும், நிதி மற்றும் வெளிப்புற இடையகங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அவசியம் என்று நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!