இலங்கை

மலைநாட்டில் அமைந்துள்ள பாடசாலை வளாகங்களில் சிறப்பு ஆய்வு நடவடிக்கை!

டித்வா சூறாவளியை தொடர்ந்து மலையக பகுதிகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பு பகுதிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்கமைய  நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களின் நிலச்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தற்போது ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகளுக்கு, பேராதனை, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் மற்றும் NBRO அதிகாரிகள் அடங்கிய 15 பேர் கொண்ட நிபுணர் குழு தலைமை தாங்குகிறது.

இதற்கிடையில், நிலவும் மழை நிலைமைகள் குறைந்து வருவதால், கண்டி மாவட்டத்திற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை திருத்தப்பட்டுள்ளது.

உடுதும்பர, தொலுவ, மினிபே, மெததும்பர மற்றும் கங்கைஹல கோரலே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மாத்திரம் இப்போது  சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!