உலகம் செய்தி

ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவுமில்லை: மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கையை மறுத்தார் புடின்

ரஷ்யாவை மற்ற நாடுகள் மரியாதையுடன் நடத்தினால், உக்ரைன் போருக்குப் பிறகு வேறு எந்தப் போரும் ஏற்படாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற நான்கு மணிநேர ‘டைரக்ட் லைன்’ (Direct Line) நேரடி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது வெறும் “முட்டாள்தனமானது” என வர்ணித்தார்.

உக்ரைன் போரை அமைதி முறையில் முடிவுக்குக் கொண்டு வரத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் நேட்டோ (NATO) விரிவடையக் கூடாது என்ற ரஷ்யாவின் அடிப்படை நிபந்தனைகளில் சமரசம் கிடையாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளைப் பாராட்டிய புடின், தீர்வு காண்பதற்கான பந்து இப்போது மேற்கத்திய நாடுகளின் கைகளிலேயே உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!