இலங்கை

தபால் சேவையை டிஜிக்டல் மயமாக்க திட்டம்!

தபால் சேவையின் நவீனமயப்படுத்தலின் கீழ் நாடு பூராகவும் 1,000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக,  வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார  தெரிவித்துள்ளார்.

நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்கும் இறுதி இலக்குடன் தபால்காரர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடையும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தபால் சேவையை நவீனமயமாக்கும் பணியை அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர்,  தபால் துறையை எந்த வகையிலும் தனியார் மயமாக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“இந்த நாட்டின் மிகப் பழமையான துறைகளில் ஒன்றான தபால் திணைக்களம், அரசியின் காலத்தில் கொண்டுவரப்பட்ட கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்னமும் உள்ளது.

அதனை அவசரமாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 80 சதவீத பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்