ஐரோப்பா

டென்மார்க் வான்வெளியில் பறந்த மர்ம ட்ரோன்கள் – ஸ்தம்பித்த விமான சேவைகள்!

டென்மார்க் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் பறந்ததை தொடர்ந்து விமான சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று சிறிய விமான நிலையங்களான எஸ்ப்ஜெர்க், சோண்டர்போர்க் மற்றும் ஸ்க்ரிட்ஸ்ட்ரப் ஆகியவையும் குறித்த ட்ரோன்கள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளன.

இந்த வார தொடக்கத்தில் நாட்டின் கோபன்ஹேகன் விமான நிலையம் ஒரு ட்ரோன் ஊடுருவல் காரணமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் டென்மார்க் உள்கட்டமைப்பு மீதான மிகக் கடுமையான தாக்குதல்” என்று விவரித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் ரஷ்ய ஈடுபாட்டை கொண்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இருப்பினும் ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்