அரசியல் இலங்கை செய்தி

ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு கூரைகளை கழற்றிய அர்ச்சுனா எம்.பி.!

“அனர்த்தத்தால் வீட்டுகூரை சேதமடைந்திருந்தால்கூட கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எனக்கு அவ்வாறு எவ்வித கொடுப்பனும் கிடைக்கப்பெறவில்லை.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறினார்.

“ அனர்த்தத்தால் சேதமடைந்த வீட்டு கூரையொன்றுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என ஆளுங்கட்சியால் அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதனால் நான் எனது வீட்டில் இருந்த இரு கூரைகளை கழற்றினேன். 20 லட்சம் ரூபா கிடைக்கும் என நம்பினேன். ஆனால் 20 லட்சம் ரூபா வழங்கப்படமாட்டாதாம்.

கழற்றிய கூரைகளை மீளமைப்பதற்கு எனக்குதான் 20 ஆயிரம் ரூபா செலவு ஏற்படும். எந்த இடத்தில் கூரைத்தகடுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது? எனவே, போலியான அறிவிப்புகளை விடுக்க கூடாது.” எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!