சோமாலியாவில் மோட்டார் ஷெல் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் பலி
 
																																		சோமாலியாவின் லோயர் ஷபெல்லே பகுதியில் மோட்டார் ஷெல் வெடித்ததில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன,
தலைநகர் மொகடிஷுவில் இருந்து தெற்கே சுமார் 120 கிமீ (75 மைல்) தொலைவில் உள்ள கொரியோலி நகருக்கு அருகே வெடிப்பு “வெடிக்கப்படாத மோட்டார் குண்டுகளால் ஏற்பட்டது” என்று குரியோலியின் துணை மாவட்ட ஆணையர் அப்டி அகமது அலி கூறினார்.
“அவர்கள் ஒரு மோட்டார் ஷெல்லுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்,அது அவர்கள் மீது வெடித்தது. அவர்களில் இருபது பேர் இறந்தனர், மற்றவர்கள் காயமடைந்தனர், ”என்று அலி கூறினார்.
“அப்பகுதியில் இருந்து கண்ணிவெடிகள் மற்றும் குண்டுகளை அகற்றுமாறு அரசாங்கம் மற்றும் உதவி நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
 
        



 
                         
                            
