உலகம் செய்தி

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட மாடல் அழகி

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்(Yemen’s Houthi rebels), மாடல் என்டிசார் அல்-ஹம்மாடியை (Entisar al-Hammadi) கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவித்துள்ளனர்.

23 வயதான என்டிசார் அல்-ஹம்மாடி, பிப்ரவரி 2021ல் ஏமன் தலைநகரான சனாவில்(Sanaa) ஒரு புகைப்பட படப்பிடிப்புக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

விபச்சாரம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்டபோது, ​​ஹம்மாடி ” உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார், இனவெறி அவமதிப்புக்கு ஆளானார் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட பல குற்றங்களை ஒப்புக்கொள்ள’ கட்டாயப்படுத்தப்பட்டார்” என்று வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனது 5 வருட சிறை வாழ்க்கையில் ஹம்மாடி 2021ல் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!