ஐரோப்பா

உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் – 08 பேர் பலி!

தெற்கு உக்ரைனின் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பல வாகனங்கள் தீக்கிரையாகியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

துறைமுகம் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஒடேசா பிராந்தியத்தின் தலைவர் ஓலே கிப்பர் ( Oleh Kiper) கூறினார்.

இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!