மாலியின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை
இராணுவ ஆட்சிக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சமூக ஊடக பதிவில் ஒற்றுமையை வெளிப்படுத்திய மாலியின்(Mali) முன்னாள் பிரதமர் மௌசா மாராவுக்கு(Moussa Mara) ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2015 வரை எட்டு மாதங்கள் நாட்டின் அரசாங்கத்தை வழிநடத்திய மௌசா மாரா, அரசின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காகவும், சட்டப்பூர்வமான அதிகாரத்தை எதிர்த்ததற்காகவும் தலைநகர் பமாகோவில்(Bamako) உள்ள தேசிய சைபர் கிரைம் மைய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார்.
மாராவுக்கு பரோல் இல்லாமல் ஒரு வருட சிறைத்தண்டனையும் 500,000 CFA பிராங்குகள் ($887) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)




