இலங்கை செய்தி

கண்டி ஹுன்னஸ்கிரியவில் நிலச்சரிவு; 90 குடும்பங்கள் வெளியேற்றம்

கண்டி – ஹுன்னஸ்கிரிய நகரத்திற்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் நிலவி வரும் கடும் மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!