போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கடற்படையை மேம்படுத்தப்பட்டுள்ளதா? – நாமல் கேள்வி!
இலங்கையில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், இதில் முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் கடல்களில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் கடற்படையை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான ராஜபக்சே கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை கடற்படையின் தொழில்நுட்பம் காலாவதியானது என்றும், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் டெய்லி மிரர் பத்திரிகை எடுத்துரைத்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2030 ஆம் ஆண்டுக்குள் கடற்படையின் மனிதவளத்தை 40,000 ஆகக் குறைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், மனிதவளக் குறைப்புக்கு ஏற்ப தொழில்நுட்பம் மேம்படுத்தப்படாவிட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்படையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படாவிட்டால், தேவைப்படும் மனிதவளம் வழங்கப்படாவிட்டால் கடல் எல்லையைப் பாதுகாப்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





