இலங்கை

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனி நாட்டில் 49 யூரோ பயண அட்டை 39 யூரோவுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த பயண அட்டையை பயன்படுத்தி பலர் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் இந்த பயண அட்டைக்கு சலுகை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் டொப்புன் நிர்வாகமானது இவ்வாறு 49 யூரோ பயண அட்டையை 39 யூரோவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

அதாவது சமூக உதவி பணங்களை பெறுகின்றவர்கள் அல்லது போன்கில்ட என்று சொல்லப்படுகின்ற வீடுகளுக்காக அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றவர்கள் மற்றும் சொஸியா கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணத்தை பெறுகின்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் ஏற்கனவே ஃவொர் எயாரா டிக்கட் என்று சொல்லப்படுகின்ற மாதாந்த பயண அட்டையை பாவிக்கின்றவர்களுக்கு இந்த பயண அட்டையானது 29 யூரோக்களுக்கு விற்க்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

அதாவது இதுவும் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் அல்லது போன்கில்ட என்று சொல்லப்படுகின்ற வீடுகளுக்காக அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றவர்களுக்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content