ஆப்பிரிக்கா செய்தி

காங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள ஒரு இராணுவ நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இராணுவ நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் ஜோசப் முடோம்போ கட்டாலாய், ஜோசப் கபிலா தேசத்துரோகம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, சித்திரவதை மற்றும் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக குற்றவாளி என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கிளர்ச்சிக் குழுவான M23ஐ ஜோசப் கபிலா ஆதரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இந்த குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

54 வயதான ஜோசப் கபிலா, 2001ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட தனது தந்தை லாரன்ட்டுக்குப் பிறகு, 18 ஆண்டுகள் காங்கோ ஜனநாயகக் குடியரசை வழிநடத்தினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!