பெர்சி அபேசேகரவுக்கு ஐந்து மில்லியன் நன்கொடை

கிரிக்கெட் களத்தில் பிரபலமான ஊக்குவிப்பாளராக இருந்த பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வையும் நல்ல ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, பெர்சியின் இல்லத்திற்குச் சென்று இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)