டெல்லியில் சில வாகனங்கள் உட்பிரவேசிக்க தடை!
டெல்லியில் காற்றின் தரநிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உமிழ்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்காத வாகனங்கள் மீது தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய பழைய டீசல் லொறிகள் நகரத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நகரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் 50% வருகையுடன் இயங்கும் என அமைச்சர் கபில் மிஸ்ரா (Kapil Mishra) அறிவித்துள்ளார். ஏனையவர்கள் வீட்டில் இருந்தே பணிப்புரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடை காரணமாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு, 10,000 ரூபாய் ($110) இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.





