கொழும்பு – கண்டி பிரதான வீதி நாளை முதல் திறப்பு
கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தில் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தது.
அதிக உயிரிழப்புகளும் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகி இருந்தது. கடுகன்னாவ பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருந்தன.
தற்பேோது மழை மற்றும் வெள்ள நிலை சீராகி வரும் நிலையில், மீட்பு பணிகள், சீராக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை முதல் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.





