ஐரோப்பா

பிரித்தானியா : ஏழு மாத பெண் குழந்தையின் தலையில் கடித்த நாய்! பின்னர் நேர்ந்த விபரீதம்

ஒரு பெண் குழந்தை தனது குடும்பத்தின் செல்ல நாயால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கோவென்ட்ரியில் உள்ள ஏழு மாத குழந்தையின் தலையில் நாய் கடித்த பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.

நாய் ஒரு ஆபத்தான இனமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நாயின் இனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் போலீசாரால் வெளியிடப்படவில்லை, ஆனால் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விசாரணைகள் தொடர்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில், பிட் புல் டெரியர், ஜப்பானிய டோசா, டோகோ அர்ஜென்டினோ மற்றும் ஃபிலா பிரேசிலிரோ இனங்கள், விலக்கு சான்றிதழ் இல்லாமல் வைத்திருப்பது சட்டவிரோதமானது.

பிப்ரவரியில், எக்ஸ்எல் புல்லி நாய்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தடைசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!