இலங்கையில் அரச துறைகளில் ஏறக்குறைய 8500 பேருக்கு வேலைவாய்ப்பு!
இலங்கையில் அரச துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழுள்ள சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப 8,547 பேரை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறை தொடர்பில் கடந்த 30.12.2024 அன்று பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சகங்களின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





