பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம் – 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெறும் வன்முறை போராட்டங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
திர்கோட்டில் நான்கு பேரும் முசாபராபாத்தில் இரண்டு பேரும், மிர்பூரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
மோதல்களில் மூன்று பொலிஸாரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
போராட்டக்காரர்கள் 38 கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக திரண்டுள்ளனர். அவற்றில் பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 இடங்களை பாகிஸ்தான் காஷ்மீரி சட்டமன்றத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்
மேலும், மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின் கட்டணங்கள் மற்றும் பாகிஸ்தான் வாக்குறுதியளித்த நீண்ட காலமாக தாமதமான சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.
கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.





