லண்டனில் நடந்த கோர விபத்து!! இந்திய மாணவி சம்பவ இடத்திலேயே பலி

லண்டன் – லண்டனில் வீட்டிற்கு சைக்கிளில் சென்ற இந்திய மாணவி ஒருவர் டிரக் மோதி இறந்தார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பயின்று வந்த செய்ஸ்டா கோச்சார் (33) இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
செய்ஸ்டாவின் மரணச் செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி அவர் இறந்தார்.
கடந்த மார்ச் 19ம் திகதி, செய்ஸ்டா கோச்சார் மீது டிராக் மோதியது. விபத்து நடந்தபோது, அவரது கணவர் பிரசாந்த் மீட்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் செய்ஸ்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் கல்விப் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 30 times, 1 visits today)