இந்தியா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சினில் தரையிறக்கம்

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி 160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் இன்று (18) காலை இவ்வாறு அவசரமாக விமானம் கொச்சினில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனால், விமானத்தில் பயணித்த மற்றும் தரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவசர சேவைகள் முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டதாகவும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.

விமானம் தரையிறங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதன் வலது பக்க டயர்கள் இரண்டும் வெடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TK

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!