இந்தியா செய்தி

இந்தியாவில் வறுமையில் வாழ்ந்த இரு நண்பர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்!

மத்திய இந்தியாவின் பன்னாவில் (Panna) இரண்டு இளைஞர்கள் அரிய வகை வைரக்கல்லை எடுத்துள்ளனர்.

சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் இருந்து அந்த கல்லை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட குறித்த கல் 15.34 காரட் எடைக்கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தக் கல்லின் மதிப்பிடப்பட்ட சந்தை விலை சுமார் ஐந்து முதல் ஆறு மில்லியன் ரூபாயாகும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா, இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும்.

அங்கு வாழும் மக்கள் வறுமை, நீர் பற்றாக்குறை மற்றும் வேலையின்மையை ஆகிய  பிரச்சினைகளை  எதிர்கொள்கின்றனர்.

ஆனால் இது இந்தியாவின் பெரும்பாலான வைர இருப்புக்களுக்கு தாயகமாகவும் உள்ளது, மேலும் வைர வியாபாரிகளுக்கு ஒரு முக்கிய இடமாக திகழ்கிறது.

உலகின் முக்கிய உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வைர இருப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!