ஐரோப்பா

ரஷ்யாவில் ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட பூனை

ரஷ்யாவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட பூனை ஒன்று உயிரிழந்துள்ளது.

பூனையின் உரிமையாளர்களிடம் RZhD ரயில் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. அது தெருப்பூனை என்று நினைத்து அதை ரயில் நடத்துநர் வெளியே வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தச் சம்பவம் இம்மாதம் 11ஆம் திகதி கிரோவ் நகரில் இடம்பெற்றுள்ளது.

கடுங்குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் டுவிக்ஸ் (Twix) என்ற அந்தப் பூனை ரயிலிலிருந்து வீசப்படுவது காணொளியில் தெரிகிறது.

பூனை தனது பயணப் பெட்டியிலிருந்து வெளியேறி ரயில் பெட்டியில் நடந்துகொண்டிருந்தது. பூனையை வீசிய ரயில் நடத்துநர் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதில் 70,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். ரயில் நடத்துநர் வேலையிலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற மனுவில் 200,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!