இந்தியா

கிணற்றுக்குள் விழுந்த பூனை… காப்பாற்றுவதற்காக குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த பூனையை மீட்க, ஒருவர் பின் ஒருவராக குதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகருக்கு உட்பட்ட வட்கி கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் நேற்று இரவு பூனை ஒன்று விழுந்தது. அதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கிணற்றுக்குள் குதித்தனர். உள்ளே சென்ற நபர்கள் திரும்பி வராததாலும், அவர்களிடமிருந்து எவ்வித சமிக்ஞையும் கிடைக்காததாலும், ஆறாவதாக ஒரு நபர் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார்.

கிணற்றில் குதித்த 5 பேரும் உயிரிழந்த நிலையில் கயிறு கட்டி இறங்கிய நபர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் இறங்கிய 5 பேர் பலி

இது தொடர்பாக நெவாசா காவல் நிலைய மூத்த பொலிஸ் அதிகாரி தனஞ்செய் ஜாதவ் கூறுகையில், “புழக்கத்தில் இல்லாத அந்த கிணறு உயிரி எரிவாயு (பயோ கேஸ்) குழியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதில் விலங்குகளின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. எனவே, விஷவாயு தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம். உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றச் சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!