ஹாங்காங்கில் வானுயர்ந்த கட்டிடத்தில் பெரும் தீ
ஹாங்காங்கில் இன்று இரவு உயர்ந்த கட்டிடத்திற்கான கட்டுமான தளம் தீ விபத்து ஏற்படடுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர் என்று நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிம் ஷா சூயியின் மையப்பகுதியில் இரவு 11:11 மணிக்கு (1511 GMT) தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இது நகரின் துறைமுகத்தில் பரபரப்பான வணிக மற்றும் சுற்றுலா மாவட்டமாகும்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கட்டிடத்தின் உச்சியில் தீப்பிழம்புகள் முதலில் காணப்பட்டன, தீப்பிழம்பு துறைமுகம் முழுவதும் தெளிவாகத் தெரிந்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தீ கட்டிடத்தின்தெரு மட்டத்தை நெருங்கியது, அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் கூடினர். சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





