இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதி உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளுக்காக நிதிகோரி முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்காகவே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.

இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறும் நோக்கிலேயே 19 ஆம் திகதி சபை கூட்டப்படுகின்றது.

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, அதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குரிய உரமை, அரசமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!