இலங்கை

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த பெண்களை ஏமாற்றியவர்களுக்கு நேர்ந்த கதி

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 2 வெளிநாட்டுப் பெண்களிடம் பயண கட்டணத்தை விட அதிகமாக பணம் பறித்ததாகக் கூறப்படும் 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து 10,000 மற்றும் 30,000 ரூபாய் கப்பம் பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய இரண்டு ஓட்டுநர்களும் மேலதிக விசாரணைக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி காவல் நிலையங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!