5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்த மலாவியின் முன்னாள் ஜனாதிபதி பீட்டர் முத்தாரிகா
உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மலாவியில் ஐந்து ஆண்டுகளாக மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பீட்டர் முத்தாரிகா 56%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா 33 சதவீத வாக்குகளைப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“மலாவி மக்களால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர்களை பிரகாசமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்ல” என்று தேர்தல் ஆணையத் தலைவர் அன்னாபெல் மதாலிமஞ்சா தெரிவித்து முத்தாரிகாவை வெற்றியாளராக அறிவித்தார்.
“குடிமக்கள் என்ற முறையில் உங்கள் விருப்பத்திற்கு மரியாதை செலுத்துவதாலும், அரசியலமைப்பின் மீதான மரியாதையாலும் நான் தோல்வியை ஒப்புக்கொள்வது சரியானதுதான்” என்று 70 வயதான லாசரஸ் சக்வேரா தோல்விக்கு பிறகு ஒரு உரையில் தெரிவித்துள்ளார்.





