அமெரிக்க சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு!

டல்லாஸில் உள்ள குடிவரவு மற்றும் அமெரிக்க சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
ICE இன் தற்காலிக இயக்குநர் டோட் லியோன்ஸ் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர்கள் ஊழியர்களாகவோ, கைதிகளாகவோ, அல்லது அவ் மையத்தை பார்வையிட வந்த பொதுமக்களாகவோ இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)