இலங்கை

லக்கல வர்த்தகரின் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது

லக்கல பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான மாணிக்கக்கல், தங்கம் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பகுதிகளில் வைத்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டி தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரின் கை கால்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த குழுவினர் கொள்ளையடித்துள்ளனர்.

லக்கல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பிரதேசங்களைச் சேர்ந்த 09 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம், 7 பவுன் தங்கம், இரண்டு போலித் துப்பாக்கிகள், இந்த கொள்ளை சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வேன் என்பவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 38 மற்றும் 49 வயதுக்குட்பட்டவர்கள்.

லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்