இலங்கை செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்தவர் பலி

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திடீரென வீசிய காற்றினால் முறிந்து விழுந்த தென்னை மரத்தின் அடியில் சிக்கி நேற்று(22) பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் சிலாபம் முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!