இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரஸாவின் கழிப்பறைக்குள் இருந்து 40 சிறுமிகள் மீட்பு

உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்படாத மதரஸா ஒன்றின் கழிப்பறையில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட நாற்பது சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயாக்பூர் தாலுகாவின் கீழ் பஹல்வாரா கிராமத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்திற்குள் சட்டவிரோத மதரஸா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது.

புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது மொட்டை மாடியில் இருந்த கழிப்பறையில் சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

குறித்த சிறுமிகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அனைவரும் பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதரஸா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதை மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!