இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் மரணம்

உத்தரபிரதேசத்தின் சீதாபூர் (Sitapur) மாவட்டத்தில், டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் (ambulance) விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்டிலிருந்து (Uttarakhand) வாரணாசிக்கு (Varanasi) ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற போது அடாரியா (Ataria) காவல் நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் மீது மோதியுள்ளது.

இந்நிலையில், ஆம்புலன்சில் பயணித்த டேராடூனைச் (Dehradun) சேர்ந்த 40 வயது நோயாளி விஷால் பாண்டே, 42 வயது ஓட்டுநர் குர்மீத் மற்றும் அவர்களுடன் பயணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் மோதியதில் 40 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 12 வயது சிறுமி மற்றும் மற்றொரு ஆண் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லக்னோ (Lucknow) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!