பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது நபர் கைது
வடக்கு பிரித்தானியாவில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“வால்சாலில்(Walsall) ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை இன ரீதியாக மோசமான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். 32 வயதான அந்த நபர் பெர்ரி பார்(Berry Bar) பகுதியில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பின்னணி குறித்த விவரங்களை காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், உள்ளூர் சமூக அமைப்புகள் அவர் பஞ்சாபி(Punjabi) பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இந்திய பெண்களுக்கு எதிரான இன ரீதியான தாக்குதல்கள் புதியவை அல்ல, சில வாரங்களுக்கு முன்பு, ஓல்ட்பரியில்(Oldbury) ஒரு பிரிட்டிஷ் சீக்கியப் பெண்ணும் இனரீதியாக தூண்டப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.





