13 ஆண்டுகளில் ரயில்களில் அடிபட்டு 149 யானைகள் பலி

ரயிலில் மோதி சிகிச்சை பெற்று வந்த குட்டி யானையும் உயிரிழந்துள்ளது.
20 ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு-கொழும்பு பிரதான ரயில் பாதையில் கவுடுல்ல வனப்பகுதியில் இருந்து பயணித்த யானைக் கூட்டம் மீனகாயா விரைவு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில், 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டத்தில் 6 யானைகள் உயிரிழந்தன, அதே நேரத்தில் 3 வயது யானைக் குட்டி ஒன்று படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தது. அந்தக் குட்டியும் இன்று இறந்தது.
இதற்கிடையில், கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் ரயில் பாதைகளில் மோதியதால் மட்டும் 149 காட்டு யானைகள் இறந்துள்ளதாக ‘மௌபிமா’ செய்தி வெளியிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, 2023 ஆம் ஆண்டில் ரயில் விபத்துகளால் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் இறந்ததாக (24) அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ரயில் பாதைகளில் காட்டு யானைகள் கடக்கும் இடங்களில் நிகழ்ந்துள்ளன.
வனவிலங்கு பாதுகாப்புத் துறை அறிக்கைகளின்படி, 2012 ஆம் ஆண்டில் 9 காட்டு யானைகளும், 2013 இல் 7, 2014 இல் 10, 2015 இல் 12, 2016 இல் 12, 2017 இல் 7, 2018 இல் 16, 2019 இல் 18, 2020 இல் 3, 2021 இல் 6, 2022 இல் 14, 2023 இல் 24 மற்றும் 2024 இல் 11 யானைகள் ரயில்களுடன் மோதி இறந்துள்ளன.
2020 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை குறைவதற்குக் காரணம், உலகளாவிய COVID-19 தொற்றுநோய் காரணமாகும்.
கடந்த 19 ஆம் திகதி மின்னேரியாவிற்கும் கல்லோயாவிற்கும் இடையில் மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் யானைக் கூட்டம் ஒன்று ரயிலில் மோதி ஆறு யானைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.