ஐரோப்பா செய்தி

உக்ரைனின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள்!

உக்ரைனின் குப்பியன்ஸ்க் பிரதேசத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய துருப்பினர் அங்கிருந்து கடந்த வருடத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய துருப்பினரின் எறிகணை மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புலனாய்வு தகவலிற்கு இணங்கவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை வெளியேறும் படி கோரப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் முன்னர் கைப்பற்றப்பட்ட இந்தப் பிரதேசம், யுக்ரைனின் தாக்குதலால் ரஷ்யா பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்தநிலையில், பல மாதங்களுக்கு பின்னர் ரஷ்யா மீண்டும் அந்தப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் தாக்குதலை முனைப்புடன் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி