பொழுதுபோக்கு

மீண்டும் கருடன் கூட்டணியில் கமிட்டானார் சூரி… அடுத்த சம்பவம் ரெடி

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாக மாறிய சூரி, எதார்த்தமான நடிப்பில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல், அவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் வெற்றி பெற்று தற்போது கதாநாயகனாக முளைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து, போன வருடம் வெளிவந்த விடுதலை படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அப்படி அவருக்கு கை கொடுத்த படம் தான் சமீபத்தில் வெளிவந்த கருடன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கொட்டுக்காளி வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

எந்த ஒரு இசையும் இல்லாமல் வெறும் கொக்கரிக்கும் சேவலை வைத்து கதையை வினோதமான முறையில் கொண்டு வந்திருக்கிறார்.

அதனால் தான் இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஹீரோவாக சூரிக்கு இது மூன்றாவது படமாக ஒரு சம்பவத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. இதனைத் தொடர்ந்து விடுதலையின் இரண்டாம் பாகமும் வெளிவர தயாராக இருக்கிறது. ஆனால் இதற்குள் சூரி ஹீரோவாக நடிக்கப் போகும் ஐந்தாவது படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.

அந்த வகையில் சூரி அடுத்து நடிக்கப் போகும் இயக்குனர் யார் என்றால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு தொடரை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். இவர்கள் கூட்டணியில் உருவாக்கப் போகும் படத்தை தயாரிக்கப் போவது கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் என்பவர் தான்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இனி சூரிக்கு தொடர்ந்து வெற்றி வாகை தான் கிடைக்கப் போகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content